கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், நித்திரவிளை சுற்றுவட்டார இரு சக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரள பைக் ரேஸரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 21ம் தேதி குலசேகரம் அருகே வீட்டின் முன் பெருக்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் இரண்டரை சவரன் மற்றும் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை தாக்கி 10 சவரன் என இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் இரு தனிப்படை அமைத்து போலீசார் சிசிடி வி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த மனிஷ் (21) பைக் ரேஸர் கைது செய்தனர்.
குமரியில் நகை திருடி விட்டு ஓசூரில் இளம் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் போது, ஒசூரில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் ஒருவன் தப்பி ஓடிய நிலையில் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.