வெளியூர் சென்ற கணவரை பைக்கில் அழைத்து வர பேருந்து நிலையம் சென்ற பெண் ஒருவர், இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் துணி வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு பரமேஸ்வரி (37) என்ற மனைவியும் கவிதா, சந்தியா என இரண்டு மகள்களும் உள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு தன்னுடைய உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக ஆறுமுகம் (கரூர்) வெளியூர் சென்று விட்டு, இன்று விடியற்காலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
தன்னுடைய மனைவிக்கு போன் செய்து பைக்கில் வந்து என்னை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தன்னுடைய கணவர் ஆறுமுகத்தை அழைத்து வர பரமேஸ்வரி பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மாநகராட்சி அலுவலகம் அருகே எதிர்திசையில் வந்த மாநகராட்சியின் குப்பை லாரி (டிராக்டர்) மீது மோதாமல் இருக்க சற்று வலதுபுறமாக செல்ல முற்பட்ட போது, பின்புறமாக வந்த கனரக வாகனம் (டிப்பர் லாரி) மோதிய விபத்தில் பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் பரமேஸ்வரியின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த எஸ்கேபி என்பவரின் டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ஆனந்தகுமாரை கைது செய்து சிவகாசி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சியின் குப்பை லாரி எதிர் திசையில் வந்ததாலும், பின்புறமாக கனரக வாகனம் வேகமாக வந்ததாலும் பரமேஸ்வரி இரண்டு வாகனங்களுக்கும் நடுவில் சிக்கி ஒதுங்க இடமின்றி வாகனத்தின் அடியில் மாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.