பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பைக் திருட்டு.. வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!
கோவையில் பட்டப்பகலில் வங்கி ஊழியரின் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மோகன் (40). இவர் வங்கியில், நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை 8 மணியளவில் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு பார்க்கேட் பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது பைக் சாவியை எடுக்காமல் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நைசாக பைக்கை ஸ்டார்ட் செய்து திருடி சென்று விட்டார். திரும்பி வந்த ரமேஷ் மோகன் தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் பைக்கை திருடி சாவகாசமாக தப்பி செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பைக்கை திருடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.