கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, தர்மலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் வலது பக்கமாக செல்ல திருப்பியுள்ளார். அப்போது, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தர்மலிங்கம் இருசக்கர வாகனத்துடன் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.