கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, தர்மலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் வலது பக்கமாக செல்ல திருப்பியுள்ளார். அப்போது, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தர்மலிங்கம் இருசக்கர வாகனத்துடன் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.