Categories: தமிழகம்

விசிட் அடிக்கும் பறவைகள்… கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்காக வருவதும் பின்னர் தங்களது நாடுகளுக்கு குஞ்சுகளுடன் புறப்பட்டு சொல்வதும் வழக்கம். அதன்படி இந்த வருடம் அதிக மழைப்பொழிவு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த காரணத்தினால் ஆங்காங்கே குளம், குட்டைகள் மற்றும் கடலோர பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் அதிக அளவு பறவைகளின் உணவான மீன்கள், பூச்சிகள் காணப்படுவதால் அதனை உண்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் உலகின் வட பகுதியில் உள்ள நாடுகளான ரஷ்யா, நைஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக பறவைகள் நமது இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்தில் தென் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகின்றன.

இந்த பறவைகள் வருகையை கணக்கில் கொண்டு நமது பகுதியின் தட்ப வெப்பநிலையை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பறவைகள் வருகை குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதும், இதன்மூலம் வருடம் வருடம் தோறும் அறியமுடிகிறது. எனவே சுற்றுச்சூழல் மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை உள்ளடக்கிய இந்த பறவைகள் வருகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இன்று தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

KavinKumar

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

8 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.