வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி… செல்லப்பிராணிகளுக்கு சிக்கன் : மீண்டும் வைரலான ரஞ்சனா நாச்சியார்!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உணவுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் தனது பங்கிற்கு சமையல் செய்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று உணவுகளை அளித்து வருகிறார்.
அதில் ஒரு படி மேலே சென்று மழை வெள்ளத்தால் நாய்களும் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் அவைகளுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மனிதர்களுக்கு மட்டுமின்றி நாய்களுக்கும் பிரத்தியேகமாக சமையல் செய்து வழங்கி வருகிறார்.
குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைவ உணவையும், நம்மை காக்கும் கால பைரவர்களான நாய்களுக்கு சிக்கன் பிரியாணி பிரத்தியேகமாக செய்து மழை வெள்ளத்தால் உணவின்றி தவித்த நாய்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி வருகிறார்.
பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வரும் நிலையில் சற்று ஒரு படி மேலே யோசித்து நாய்களுக்கும் பிரத்தியேகமாக சிக்கன் பிரியாணி செய்து வழங்கி வந்தது வரவேற்பை பெற்றது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.