அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக பிரியாணிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையின் இதயமான கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவருடன் பழகி வந்து உள்ளார். மேலும், இருவருமே பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் வெளியே சென்றுள்ளனர். பின்னர், பல்கலைக்கழகம் திரும்பிய அவர்கள், பல்கலை வளாகத்திற்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற இரண்டு பேர், பேசிக் கொண்டிருந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
மேலும், இதனை வீடியோ எடுத்த அந்த நபர்கள், வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், பிஎன்எஸ் 64 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
இதன்படி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில்ல், சம்பவத்தன்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர் ஞானசேகரன் என்பதும், அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. சாலையோர பிரியாணி கடை நடத்தி வரும் இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நினைவுக்கு திரும்பிய சிறுவன்… சிகிச்சைக்காக ரூ.2 கோடி கொடுத்த புஷ்பா படக்குழு!
மேலும், ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணி கடை விற்பனையை முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று, அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி, பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
குறிப்பாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தனிநபராகச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.