புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார்.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வரும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், ஏ.சி.எஸ். குழுமத் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். தற்போது இதுதொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.
எனினும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். 3 லட்சத்து 52, 990 வாக்குகள் பெற்று ஏசி சண்முகம் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.l
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.