பழனி அருகே முத்தனம் பட்டியில் ரேக்ளா பந்தயம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பழனி அருகே முத்தனம் பட்டி கிராமத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி ஜனதா கட்சியின் சார்பில் ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற இருந்தது. இதற்காக முத்தனம் பட்டியில் ரேக்ளா ரேஸ் பந்தயத்தை பொதுமக்கள் காண பார்வையாளர்கள் ஸ்டேடியம், சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைப்பது, என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அங்கு வந்த போலீசார் பல்வேறு காரணங்கள் கூறி ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி தர வேண்டும் என கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.