ராதிகா சரத்குமார் நடிகை என்பதைத் தாண்டி ஒரு தைரியமான பெண்ணாக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழக முழுவதும் மார்ச் 20ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது நாளாக இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ராதிகா சரத்குமார் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மேலும் ராதிகா சரத்குமார் வேட்பு மனு தாக்கலின் போது அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சிக்கும், பாஜகவின் தோழமை கட்சிகளுக்கும் மிகப்பெரிய வெற்றியாக வரவேண்டும் என நினைக்கிறேன். மேலும், வரும் நாட்களில் மக்களை சந்தித்து மக்களுக்கு சேவை செய்ய இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. தற்போது நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல் என மக்கள் புரிந்து கொண்டிருப்பதே அதுவே ஒரு வெற்றி. நடிகை என்பதைத் தாண்டி ஒரு தைரியமான பெண்ணாக மக்கள் என்னை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் போலத்தான். விருதுநகர் பாராளுமன்றத்தில் பாஜக தலைவர்கள் யாரெல்லாம் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள் என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும், என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலின் போது எதிரெதிரே வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.