தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதை அறிந்த அப்பகுதி வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.