தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதை அறிந்த அப்பகுதி வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.