தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாக திமுகவினர் உள்ளிட்ட 30 பேர் மீது பாஜக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்திற்கு பாஜகவின் மாநில துணை தலைவர் பால் கனகராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து தனியார் வாராந்திர பத்திரிகை போன்று 5 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்று திமுகவினர் மற்று அவர்களது ஆதரவாளர்கள் 30பேர் தவறான தகவல் பரப்பி வருவதாக கூறி புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறுகையில் :- திமுக ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி. திமுக அமைச்சர்கள் திமிராக பேசி வருகின்றனர். சமூக வலைதளத்தில் மாநில தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்து வருகின்றனர்.
எனவே, 30 பேர் கொண்ட திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை புகாராக கொடுத்து உள்ளோம். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளனர், எனக் கூறினர்.
முதல்வர் முக.ஸ்டாலின் வெளிநாடு சென்ற போது பாஜக விமர்சித்த கேள்விக்கு, அவருடன் குடும்பத்தினர், ஆடிட்டர் ஆகியோர் சென்றனர். அங்கு 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ததாக ஆதாரத்தின் அடிப்படையில் தான் மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருந்தார். ஆனால் முதல்வர் இதுவரை இதுகுறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் ரீதியாக மட்டுமே கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம், என கூறினார்.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.