Categories: தமிழகம்

எங்களுக்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேச்சு!!

பாஜகவினர் தமிழகத்தில் அரசியல் ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை எப்படி கையாள வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
திராவிடர் கழக தலைமை கழக கூட்டத்தில் தந்தை பெரியார் 144 வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பட ஊர்வலம் ஒலிபெருக்கி வழியில் பெரியார் வரை இசை பாடல்கள் என்கிற வகையில் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள நிலையில் அங்கு சுமார் 150 அடி உயர பெரியார் சிலையை அமைப்பதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருப்பதாக பாராட்டினார்.

திராவிடர் கழக சித்தாந்தம், பாஜக சித்தாந்தம், நேர் எதிர் சித்தாந்தம் எனவும், திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை எனவும் அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மீது செருப்பு வீச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர் அரசியலுக்காக செருப்பு வீச்சில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் என ஊடகவியலிடம் அளித்த பேட்டியின் மூலம் அவரது தரத்தை காட்டியுள்ளதாகவும் அவர் தலைவர் பகுதிக்கு தகுதியானவரா என கேள்வி எழுப்பிய அவர், சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்.

ஆதிதிராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

24 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

1 day ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

1 day ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

1 day ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 day ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

1 day ago

This website uses cookies.