திருவாரூரில் சமூக வலைதள பக்கத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்ட பாஜக மாவட்ட துணை தலைவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி முகநூல் வலைதள பக்கத்தில் Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ, புகைப்படம் மற்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட, தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் என்பவர் திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் தொடர்பாக திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி, குற்றவாளியை பிடிப்பதற்கு திருவாரூர் திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தை ஆய்வு செய்து வந்தனர்.
இவ்வாறு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளை பதிவிட்டு வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்கா, கிளேரியம், கப்பலுடையான், தெற்கு தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சதீஷ்குமார் @ சதா சதீஷ் (திருவாரூர் மாவட்ட பாஜக துணை தலைவர்) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி 23ந்தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் வைக்கப்பட்டார்.
மேலும், சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற அவதூறு பரப்பும் வகையிலும், சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுவோர் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.