முதலாளி ஆசைக்கு நீ இணங்கிப் போ.. பாஜக பிரமுகரின் பசிக்கு துணை போன தொழிலாளியின் குடும்பம் : இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் கரியமங்கலம். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வி. இவரது கணவர் சீனுவாசன் இவருக் 55 வயதாகிறது.
இவர் பாஜவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக பணியாற்றி கொண்டிருந்தர். தற்போது, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு பொறுப்பு வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சீனுவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ராமஜெயம் என்பவர், வேலை பார்த்து வருகிறார்.. இவர் அந்த நிலத்திலேயே மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
22 வயதாகும் அவரது மனைவியுடன், ராமஜெயத்தின் அப்பா பெருமாள், அம்மா பச்சையம்மாளும் ஒன்றாகவே வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சீனுவாசன், ராமஜெயத்தின் மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்ததாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து கணவன் ராமஜெயத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ராமஜெயம் சொன்ன வார்த்தைதான் மனைவியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் சொன்னது. “அவர்தான் நமக்கு முதலாளி.. நிலத்தின் ஓனர் சொல்வதை போலவே, கேட்டு நடந்துக்கோ” என்று கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த 22 வயது இளம் மனைவி, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மன உளைச்சளில் இருந்துள்ளார். இந்த நிலையில் விவசாய நிலத்திலேயே, சீனுவாசன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூர சம்பவத்திற்கு பெண்ணின் கணவன் மற்றும் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் கொந்தளித்த பெண், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
இதில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக பிரமுகர் சீனுவாசன், அவருக்கு உடந்தையாக இருந்த ராமஜெயம், பெருமாள், மற்றும் பச்சையம்மாள் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.