திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இங்கு உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. (33) இவர் பாஜக இளைஞர் அணி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்தபடியே கூர்மையான கத்தியை வைத்து பின்னணி பாடல் இசையுடன் வீடியோ எடுத்து தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக இளைஞரணியின் ஒன்றிய செயலாளரான ராஜிவ்காந்தி, பழனியில் கடந்த வாரம் பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது பணியாளாக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.
இவர் மீது குடிபோதையில் பேருந்தை மரித்ததாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.