திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இங்கு உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. (33) இவர் பாஜக இளைஞர் அணி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்தபடியே கூர்மையான கத்தியை வைத்து பின்னணி பாடல் இசையுடன் வீடியோ எடுத்து தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக இளைஞரணியின் ஒன்றிய செயலாளரான ராஜிவ்காந்தி, பழனியில் கடந்த வாரம் பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது பணியாளாக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.
இவர் மீது குடிபோதையில் பேருந்தை மரித்ததாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
This website uses cookies.