சிவகாசியில் பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42). விருதுநகர் பாஜகவின் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார்.
இவர் திருத்தங்கல்லில் ஜவுளிக்கடை நடத்தும் ஈஸ்வரனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திருத்தங்கல் போலீஸாரால் சத்யராஜ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளி வந்த சத்யராஜ் இன்று திருத்தங்கல் காவல் நிலையம் முன்பாக உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீப்பற்றிய உடன் மேலாடையை கழற்றியதால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தீக்குளித்த அவரை மீட்ட போலீசார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மீது பொய் வழக்கு தொடுத்து தன்னை கைது செய்துள்ளதாகவும், தமிழக அரசு தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் எனவும் தீக்குளித்த சத்யராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.