வத்தலகுண்டு அடுத்த,9 பட்டிவீரன்பட்டி அருகே கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாசலம்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும், இவர் வத்தலகுண்டுவில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த சிவதர்ஷினி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் சைலேஷன் (10) என்ற மகனும், சாய் சிரஞ்சி (4) என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டன் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி தனது இரண்டு குழந்தைகளையும், கடையில் வேலை செய்யும் நபர் மூலம் மனைவி சிவதர்ஷினியின் சொந்த ஊரான ஈரோட்டிற்கு அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, வீடு அதிக நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, கணவன் மனைவி இருவரும் மின்விசிறி மாட்டும் இரும்பு கொக்கியில் சேலை மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் எழுதி வைத்த தற்கொலை செய்து கொண்ட கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
காவல்துறை விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பாஜகவின் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், வத்தலகுண்டு காந்தி நகரில் குடியிருக்கும் பழைய வத்தலகுண்டு சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரது மனைவி ஆஷா (21) என்பவரது பெயரில் வத்தலகுண்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூபாய் 2 இலட்சம் வரை கடன் பெற்று வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்கள் மற்றும் மொபைல்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆஷாவின் கணவர் ஆகாஷ் மற்றும் ஆஷா வத்தலகுண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் காந்தி நகரைச் சேர்ந்த, தீபக் (19) ஆகிய மூன்று பேரும் கடந்த வெள்ளிக்கிழமை மணிகண்டனிடம் ஆஷா பெயரில் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை உடனே செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் அவரது மனைவி சிவதர்ஷினி ஆகிய இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக ஆகாஷ் இவரது மனைவி ஆஷா மற்றும் தீபக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.