அசுர வளர்ச்சியில் பாஜக.. அண்ணாமலையின் அடுத்த டார்கெட் காங்கிரஸ் எம்பி : பாஜக பிரமுகர் பரபரப்பு பேச்சு!!
பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக மிகப்பெரிய எழுச்சி இயக்கமாக மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். இன்றைக்கு அரசியலில் ஊழல் இருப்பதை ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை பெரு முயற்சி செய்து வருகிறார்.
ஊழலுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ஊழலை எதிர்க்க தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் தூய்மையான ஆட்சி,ஊழலற்ற ஆட்சி வரவேண்டும் என்றுதான் அண்ணமலை விரும்புகிறார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து உள்ளது. ஊழல் செய்து வந்த காங்கிரசுடன் திமுகவும் கைகோர்த்துள்ளது. இன்றைக்கும் இரு கட்சிகளும் ஊழலில் ஊறிப் போய் உள்ளது. இந்த இரண்டு கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் செயல்பாட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் தான் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் பாஜகவுக்கு கொடுத்துள்ளார்கள்.
வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 தமிழக அரசு நிதி கொடுத்து உள்ளது. அது பொது மக்களுக்கு போதாது. ரூ பத்தாயிரம் ஆக உயர்த்தி தரவேண்டும். அதே சமயத்தில் பணம் ஒரு பெரிய விஷயம் இல்லை வெள்ளம் பாதித்த போது மக்களை சந்தித்து பேசி அவர்களின் துயரத்தை நீக்க திமுக அரசு முயற்சி செய்யவில்லை. இதனால் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர் எல்லாக் கட்சியிலும் எல்லா பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.எங்களது ஆட்சி இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தார் அவர் மீது ஊழல் பட்டியல் வந்திருக்கும். எம்பி நிதி ஒழுங்காக செலவு செய்யப்படவில்லை மக்களுக்கு பலம் சென்றடையவில்லை.
பதவியை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி உள்ளார். ற்றி பெற்ற பின் திருச்சி மக்களை சந்திக்கவே இல்லை. திருச்சிக்காக நாடாளுமன்றத்தில் பேசியது என்ன என்று நினைக்கும் போது திருச்சி மக்களுக்கு வயிற்று எரிச்சலாகத்தான் இருக்கும். பதவி இல்லாததால் அவர் ஊழல் ஊழலில் சிக்கவில்லை. அவருடைய செயல்பாடு திருச்சி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்தார்.
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
This website uses cookies.