தமிழகம்

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான எல்.முருகன் இது குறித்து பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

சென்னை கே கே நகரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

 இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “SC/ST மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்திருக்கிறார் முதல்வர். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் எதாவது ஒரு விடுதிக்குச் சென்று பார்த்திருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும். 

SC/ST விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அதை விட கொடுமையான ஒன்று வேறு எதுவும் இல்லை. அது போன்ற விடுதியில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா?” என கேள்வி எழுப்பினார். 

மேலும் பேசிய அவர், “பாஜக ஆட்சி செய்கின்ற மத்திய பிரதேசத்தில் SC/ST விடுதியை பார்த்துவிட்டு வாருங்கள்” எனவும் அவர் கூறியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

3 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

4 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

5 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

6 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

7 hours ago

40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…

8 hours ago

This website uses cookies.