சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு பாஜக தொண்டர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- மிக்ஜாம் புயலின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு வரை, கனமழையும், காற்றும் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும், தங்கள் பணிகள் அனைத்தையும் ஒரு நாள் ஒத்தி வைத்து, பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தமிழக பாஜக சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாஜக சகோதரர்களும், நிர்வாகிகளும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், சென்னை வரும் ரயில்கள், மழை காரணமாக, புறநகர் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ரயில் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் இயன்ற வரையில் செய்து தர
பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இந்தக் கடினமான நேரத்தில் மிகக் கவனத்துடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.