திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எலாவூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு என்பவர் கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வரும் கட்டிடத்தை சொந்தமாக வாங்கியுள்ளார்.
இதையும் படியுங்க: கோவை ஹவுசிங்யூனிட் 5வது மாடியில் இருந்து விழுந்து அரசு ஊழியர் பலி : தற்கொலையா? போலீசார் விசாரணை!
வாங்கிய உடனே அலுவலகத்தை காலி செய்யுமாறு முனிரத்தினம் கூறிய நிலையில் 3 மாத காலம் அவகாசம் வழங்குமாறு பிஜேபி பிரமுகர் தியாகு கோரிக்கை வைத்த நிலையில் தினந்தோறும் தியாகுவிற்கு தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று இரவு இடுப்பளவு உயர பட்டா கத்தியுடன் பிஜேபி அலுவலகத்திற்குச் சென்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முனிரத்தினம்
அலுவலகத்தின் முன் பட்டா கத்தியை தீட்டியபடி அங்கிருந்த தியாகுவை சட்டையை பிடித்து இழுத்து அலுவலகத்தின் உள்ளே சென்று அவதூறாக பேசியதுடன் வெட்டி வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர் வந்து தடுத்தபோது அவரையும் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்தான வீடியோ இணையதளத்தில் பரவி வரும் நிலையில் ஆரம்பாக்கம் போலீசார் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். பெற்ற பெண் குழந்தையின் முன்னிலையில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முனிரத்தினம் தந்தையை வெட்ட பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…
தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும்…
போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர்…
பார்வையற்ற 16 வயது சிறுமியை பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் 3வருடமாக பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
This website uses cookies.