தமிழகம்

நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னும் தெரியாது.. பாஜக மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. ஆனால், இதனைப் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை.

இதற்கு காரணம், தலைமை சரியில்லை என்று நினைக்கிறேன். கட்சியின் தலைவர்கள் அதற்கான கட்டுப்பாடுகளை வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை அதைச் செய்வதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது வராது. எனவே, அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஜிஎஸ்டி வரியை அழிக்க வேண்டும். அதனை முட்டாள்தனமாக கொண்டு வந்து உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது. அவர் துறை சார்ந்த அதிகாரிகள் மொத்தமாக எழுதிக் கொடுப்பர். அதனையே அவர் பேசுவார்” எனத் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, “நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால் நானே நீதிமன்றத்திற்குச் செல்வேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தேர்தல் செலவு குறையும் என்பதை நம்புபவர்கள் மக்கு. ரஷ்யா மற்றும் சீனாவில் ஒரே இடத்தில் இருந்து ஆட்சி அதிகாரம் செய்யலாம் என்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் அது நடக்காது” என சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே கூறி இருந்தார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய சேசிங்… வனப்பகுதிக்குள் சிக்கிய கார்..!!

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இதன் மீதான விவாதம் நடைபெறும். மேலும், சமீபத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரை உயர்த்தப்பட்டது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.