Categories: தமிழகம்

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் தலைமறைவு.. தருமபுரம் ஆதீன மடத்திற்கு 24X7 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் தலைமறைவு.. தருமபுரம் ஆதீன மடத்திற்கு 24X7 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் மடம் பழமை வாய்ந்த சைவ மடம் ஆகும். இந்த மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தான கணக்காளருமான விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத்(வயது 32), மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், இதை சமூக வலைதளங்கள் மற்றும் டி.வி. சேனல்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.

மேலும் என்னை கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயற்சி செய்தனர். அத்துடன் தங்கள் சார்பில் திருவெண்காட்டை சேர்ந்த விக்னேஷ்(33) என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.

இதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், விக்னேஷ், குடியரசு, தஞ்சை மாவட்டம் நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விக்னேஷ், சீர்காழி ஒன்றிய பா.ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். கைதான 4 பேரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.