தமிழகம்

மருத்துவர் மீது கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைக்கு வர அச்சம் : வானதி சீனிவாசன் கண்டனம்!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள காய்கறி பஸ் ஸ்டாப் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களை சந்தித்தார்‌.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது சமீபத்திய உதாரணம் என்றும் கூறினார்.

அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் பணியில் இருப்பவர்களின் பணிச்சுமையை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றும் கூறினார்.

மேலும், அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் இது அரசாங்கத்தின் தோல்வி என்றும் சாடினார்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்ததாகவும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபடக்கூடாது என்று சட்டப்பேரவையில் கூறியிருந்ததாகவும் கூறிய அவர், பல போலி ரேஷன் கார்டுகள் இருக்கின்ற சூழலில், யார் சரியான நபர் என்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நிறைய அரசு மருத்துவமனைகள் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்கள் பயப்படும் சூழல் இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்ட அட்டையை கொண்டு செல்லும் மக்களிடம் நிறைய மருத்துவமனைகள் மாநில அரசின் காப்பீட்டு திட்ட அட்டையை கொண்டு வரும்படி கேட்பதாகவும் கூறிய அவர், அப்படியானால் மருத்துவமனைகள் மாநில அரசால் மிரட்டப்படுகிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதையும் படியுங்க: மீண்டும் மருத்துவர் மீது தாக்குதல்.. அதுவும் அரசு மருத்துவமனையில் தான்!

மேலும், எந்த காப்பீட்டு அட்டை கொண்டு வந்தாலும் அந்தத் திட்டத்திற்கான பலனை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் அமைதியாகவும் இயல்பாக இயங்குகின்ற சூழலை பிரதமர் மோடி ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் தீவிரவாத தாக்குதல் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறிய அவர், மதப் பிரிவினை வாதத்தை பேசுகின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்க முடியுமா என்று பார்க்கிறார்கள் என்றார்.

மேலும், அமரன் திரைப்படத்தில் எந்த இடத்தில் பொய் இருக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள் என்று கூறியதோடு இவர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு கலைஞர் பெயரை மட்டுமே வைப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு, அரசுத் திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் அரசுக்கு உரிமை இருக்கிறது என்றாலும் மீண்டும் மீண்டும் ஒரே பெயரை மட்டுமே வைப்பது வரலாற்றில் ஒருவர் மட்டுமே நாட்டு நலனுக்காக பணி செய்தார் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்று கூறிய அவர், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருக்கும் பிரதமர் மோடி, அரசு திட்டங்களுக்கு பிரதம மந்திரி என்றுதான் பெயர் சூட்டுவாரே தவிர அவருடைய பெயரை வைத்ததில்லை என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

21 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

21 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

21 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

22 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

23 hours ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

24 hours ago

This website uses cookies.