33 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் போது இன்னும் அதிகமான உரிமைகள் கிடைக்கும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இந்த சமுதாய வளைகாப்பில் பங்கேற்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, சந்தனம் பூசி சடங்குகள் செய்தனர். சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் அடங்கிய சீர் வரிசை தட்டை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் அணி தலைவர் மாணவி சீனிவாசன் கூறியதாவது:- ஆரோக்யமான அம்மா என்னும் திட்டம் செப்டம்பரில் நடக்கும். இன்று கோவையில் நடக்கிறது. பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் இது போன்ற நிகழ்ச்சிகள் காக்கின்றன. தமிழ் நாட்டில் மாத்ரு வஞ்சன யோஜனாவுடன் முத்துலட்சுமி திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நிதி உதவிகள் கடந்த சில மாதங்களாக முறையாக கிடைப்பதில்லை என்ற சிக்கலை அமைச்சர்களிடம் கூறி உள்ளேன். அங்கன்வாடி மையங்களுக்கு என் தொகுதி நிதியை அதிகம் கொடுக்கிறேன். குழந்தைகளுக்கு, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் பேசி வருகின்றனர். மோடி பிரதமராக வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்த கருத்து வேறுபாடு இல்லை. கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை தேசிய தலைமை வழிகாட்டுதல் படி நடக்கும், என தெரிவித்தார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.