‘சிவபெருமான் குறித்து இழிவாக விமர்சித்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’: பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்..!!
Author: Aarthi Sivakumar29 April 2022, 9:37 pm
கடவுள் குறித்து இழிவாக விமர்சனம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் நாரயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை. ஆனால், அந்த அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம்.
அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம்தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும்.
காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்
0
1