யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி, அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் வரும் மாதம் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லடாக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சூழ்நிலை தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்ததோடு, மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். மேலும், அந்த அலுவலகத்தை கல்வீசிகளால் தாக்கினர்.
இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.