இளைஞரணி மாநாட்டிற்காக திமுக வைத்த போஸ்டர்.. உதயநிதி முகத்தை மறைத்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் : பரபரப்பு புகார்!!
நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இனியன் என்ற செந்தில்முருகன் ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டிற்காக பாளையங்கோட்டை சமாதானபுரம் தூத்துக்குடி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகை இளைஞரணி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பர போர்டில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் பொன்பாலகணபதி, மாவட்ட பொறுப்பாளர் நீலமணியாதவ், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் நெல்லை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா என்ற நபர் வேண்டும் என்றே திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் நோக்கில் போஸ்டரை ஒட்டியுள்ளார்.
எனவே பிச்சையா உள்ளிட்ட மேற்படி எதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்த மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகீர்உஷேன், மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் மாலதி கண்ணன் உள்பட கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.