வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமாரவேல் பாண்டியனிடம், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயனி மற்றும் பாஜக நிர்வாகிகள் புகார் மனுவை அளித்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட குமாரவேல் பாண்டியன், உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாயினி பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ,
35 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு விதங்களில் அச்சுறுத்தி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் தங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.எனவே அது போன்ற நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அனைத்து பூத்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு மையங்களை கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் எந்த ஒரு தனிநபரும் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குமரவேல் பாண்டியனிடம் புகார்களை தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். புகார் அளிக்கும்போது பாஜக மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.