பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 4ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. அதாவது, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், விமர்சனங்களையும் எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமூகநீதி காவலர் வி.பி.சிங், கான்சிராம் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்னும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளேன்!,” என தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,”நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவருக்கும், 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த உங்கள் கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் பாரத ரத்னா விருது அளிக்காததை வன்மையாக கண்டிப்பீர்களா? சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்று கண்டனம் செய்வீர்களா?
கூட்டணியை விட்டு வெளியேறுவீர்களா அல்லது வழக்கம் போல், பதவிக்காக, அதிகாரத்திற்காக இந்த மூவரையும் மறந்து கொள்கையை காற்றில் பறக்க விடுவீர்களா?,” என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.