பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள் என பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா, தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கண்ட கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வேலூர் இப்ராஹிம் பேசுகையில், “பாரதப் பிரதமருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. அதனால், பாதுகாப்பு வழங்க முடியாது என கூறுகிறது காவல்துறை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுகவை கண்டித்து பேசினால் காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர்.
திமுக ஆட்சி என்றால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு, உளவுத்துறை உறங்கி கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் ஆபத்தான சூழல் இருக்கிறது. திமுக ஆட்சியை தமிழகத்தை விட்டு துரத்தி அடிக்க வேண்டியது நமது கடமை என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.