தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் முருகானந்தம் மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதிஷ் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடு வீடாக நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தேர் மின்சாரம் தாக்கி எரிந்த இடத்தையும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய முருகானந்தம், இந்த விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் அப்பகுதியில் சாலை உயர்த்தப்பட்டு அகலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிழாக்கள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசு அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
இதற்கு அரசாங்கமும் காரணம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் அதிகப்படுத்த வேண்டும். அந்த குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாணவர்களின் கல்வி செலவு மேல் படிப்பிற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.