Categories: தமிழகம்

அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்றார் பிரதமர்: கோவையில் பா.ஜ.க இளைஞரணி துணை தலைவர் பேச்சு!!

கோவை : பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசியுள்ளார்.

பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், துணைத்தலைவர் சபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் கோவை மாநகர வார்டுகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏ.பி.முருகானந்தம் பேசியதாவது, அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி புகழராம் சூட்டினார். தமிழக தலைவர்கள் நிர்வாகிகள் மீது அவர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்.

பா.ஜ.க.,வின் அடுத்த இலக்கு தமிழகம் தான். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 25 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சியில் இருக்கப்போவது பா.ஜ.க தான்.

திமுக.,வை பற்றி நாம் பயப்பட தேவையில்லை. அண்ணாமலை எந்த ஒரு தொண்டனையும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் தூங்குவதே இரவு 2 மணிக்கு மேல் தான். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். நாம் அதற்கு பாடுபட வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களை அழைக்கலாம்.

மக்களை நாம் சென்றடைய வேண்டும். வார்டு வாரியாக இனி கூட்டங்கள் நடத்தப்படும்.திமுகவில் எத்தனை தலைவர்கள் வந்தாலும், பிரதமர் மோடி மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை போல் இருக்க முடியாது.

இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் நாம் தொடங்கினோம். இது தற்போது தேசிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2006 ல் இருந்து தற்போது வரையிலான தேர்தலில் மாற்றுக்கட்சி வேட்பாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து பேச வேண்டும்.

தேமுதிக, அமுமுக, நாம் தமிழர் மற்றும் மநீம ஆகிய நான்கு கட்சிகளையும் நாம் பின்தள்ளியுள்ளோம். மொடக்குறிச்சி தொகுதியில் கங்கனம் கட்டிக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தோம். சுலபமாக வெற்றி பெறலாம் என்ற மமதையில் இருந்ததால் களப்பணியாற்றினோம்.

கோவை பா.ஜ.க.,வின் கோட்டை. ரத்தத்தை சிந்தி இக்கட்சியை இங்கு வளர்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

15 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

16 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

16 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.