மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது. எந்த அளவுக்கு அந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது மீதமுள்ள பணிகளில் விரைவாக செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்திற்கு வரலாம்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அவர்களுடைய முடிவை பொருத்தது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்வாகிகள் செயல்படும்போது அவர்கள் வகிக்கக்கூடிய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டுதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதால் தான் சசி கரூர் பிரச்சாரத்திற்கு யாரும் செல்லவில்லை.
இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் மற்றும் கனிமொழிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சித் தலைவராக அவர் பொதுக்குழுவில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ஒரு சில ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்
அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. அதை ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன.
மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது
இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு அது முயற்சி செய்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்
மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம். தமிழகத்திலும் இது போன்று மோடி மற்றும் அமித்ஷா நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம்.
சட்டசபையில் அதிமுக இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய நானும் ஆவலாக உள்ளேன். திமுக எம்பி ஆ ராசா மீது சிபிஐ சொத்து குவிப்பு வழக்கில் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது அதை கண்டிப்பாக ராஜா எதிர் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.