தமிழகம்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலில் வந்த குறியீடு!!

கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

கோவை மாநகரின் மத்திய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது சுமார் 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்து உள்ளது. இது குறித்து மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் மிரட்டலைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு மோப்ப நாய்கள் கொண்டு அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக முக்கிய அறைகளிலும், வாகனம் நிறுத்தும் இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த மிரட்டல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுடைய பதற்றம் நிலவியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்திற்குள் நுழைய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மிரட்டல் விடுத்தது யார்? அதன் பின்னணி என்ன ? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு புரளியா ? மிரட்டலா ? அல்லது உண்மை மிரட்டலா ? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மின்னல் அனுப்பப்பட்ட ஐ.பி முகவரி கண்டு அறியும் முயற்சியில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

1 day ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

1 day ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

1 day ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

1 day ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 day ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

1 day ago

This website uses cookies.