ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்களுக்கு சொந்தமான பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியானது (THE INDIAN PUBLIC SCHOOL) செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு இன்று காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவ மானவியர்களை பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சில மாணவ மணாவியர்களை வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் அழைப்பு தொலைபேசி எண் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.