Categories: தமிழகம்

இது உங்க கண்ட்ரோல் ஏரியா.. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையின் நீயா நானா போட்டியில் அவதிப்படும் மக்கள்..!

நீயா நானா போட்டியில் கழிவுநீர் வாய்க்காலை அடைத்ததால் வீடு மற்றும் கல்லறை தோட்டத்திற்குள் கழிவுநீர் செல்வதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என அனைவரும் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஏபி நகர் அந்தோணியார் தெரு.சவேரியார் பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களின் கல்லறை தோட்டம் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப்பட்டி அருகே உள்ளது.

அதேபோல், சாலையில் இருபுறமும் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை உடைத்து ஒரு பகுதியில் கழிவு நீரை கொண்டு சென்றதாகவும், அந்த கழிவு நீரை ஒரு சிலர் மாநகராட்சி அதிகாரிகள் ஆதரவுடன் அடைத்து வைத்ததால், இப்போது கழிவு நீர் அனைத்தும் கல்லறை தோட்டத்திற்குள் தொடர்ந்து சென்று வருவதாகவும், அதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவு நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் செல்வது மட்டுமல்லாமல் சாலையிலும் ஐந்து இடங்களுக்கு மேற்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தொடர்ந்து தேங்கியுள்ளது.

இதனால், துர்நாற்றம் வீசுவதும் தொற்று நோய் ஏற்படுவதும் அதேபோல் கல்லறை தோட்டத்தில் போக முடியாத நிலையிலும், சாலையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் செல்வதால் தொற்றுநோயம் ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நீயா நானா போட்டியில் யாரும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப் பட்டி அருகே கோவில் மணி அடித்து, மரங்களை சாலையில் போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக சாலையில் இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வராதால் காவல்துறை அதிகாரிகளே சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

Poorni

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

7 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

11 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

31 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

43 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

1 hour ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.