தமிழகம்

நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!

தென்காசி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஆழ்வான் துலுக்கப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதற்காக, தென்காசியில் இருந்து ரயில் மூலம், தான் வேலை செய்யும் பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், ரயிலை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மது அருந்திய அந்தச் சிறுவன், தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து, பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் அந்தச் சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவன்ம் பேருந்து அந்த வழியாக திரும்பி வரும்போது நடத்துநரைத் தாக்குவதற்காக காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், நெல்லை, பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை செல்லும் அரசுப் பேருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது மது போதையில் இருந்த அச்சிறுவன், பேருந்து நடத்துநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்த முயன்றுள்ளார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் நைசாக சைடு வாங்குகிறதா மதிமுக? பரபரப்புக்கும் கட்டளைகள்!

மேலும், இதனைத் தடுக்க முயன்ற போது நடத்துநரின் இடது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், உடனடியாக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து, நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

23 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

23 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

24 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

24 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.