தமிழகம்

சினேகாவின் துப்பட்டாவால் தீபக் செய்த காரியம்.. சிக்கிய பரபரப்பு கடிதம்!

திருப்பூரில், காதலித்து வந்த பெண் திடீர் மறுப்பு தெரிவித்ததால், அவரைக் குத்திவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ் படித்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் மாவட்டம், ஆர்.கே.ஜி நகர் 2வது வீதியைச் சேர்ந்த சினேகா (23) என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், தீபக்கின் வயது தெரியாமல் சினேகா காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே, சினேகா கடந்த பொங்கல் விழாவிற்கு, தீபக்கின் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளார். அதன் பின்னரே தீபக்கின் வயதை சினேகா அறிந்துள்ளார்.

இதனால், காதலிப்பதை சினேகா நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட தீபக், கடந்த சில நாட்களாக சினேகாவிடம் போன் மூலம் காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு சினேகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக், கோவையில் இருந்து கத்தியை வாங்கிக் கொண்டு, நேற்று முன்தினம் பிற்பகல் சினேகா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, சினேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருடன் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த தீபக், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சினேகாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் கிழித்துள்ளார்.

பின்னார், சினேகாவின் துப்பட்டாவால் தீபாக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தீபக்கின் உடலை மீட்ட திருப்பூர் வடக்கு போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!

மேலும், தீபக்கின் பையை சோதனை செய்தபோது, அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘‘நான் உன்னை திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. இனிமேல் இந்த உலகத்தில் நம்மால் ஒன்றாக வாழ முடியாது. அதனால் உன்னையும் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். நாம் இருவரும் சொர்க்கத்தில் போய் ஒன்றாக சேர்ந்து வாழலாம்’’ என எழுதியிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

38 minutes ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 hour ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

3 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

3 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

4 hours ago

This website uses cookies.