தமிழகம்

சினேகாவின் துப்பட்டாவால் தீபக் செய்த காரியம்.. சிக்கிய பரபரப்பு கடிதம்!

திருப்பூரில், காதலித்து வந்த பெண் திடீர் மறுப்பு தெரிவித்ததால், அவரைக் குத்திவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ் படித்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் மாவட்டம், ஆர்.கே.ஜி நகர் 2வது வீதியைச் சேர்ந்த சினேகா (23) என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், தீபக்கின் வயது தெரியாமல் சினேகா காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே, சினேகா கடந்த பொங்கல் விழாவிற்கு, தீபக்கின் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளார். அதன் பின்னரே தீபக்கின் வயதை சினேகா அறிந்துள்ளார்.

இதனால், காதலிப்பதை சினேகா நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட தீபக், கடந்த சில நாட்களாக சினேகாவிடம் போன் மூலம் காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு சினேகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக், கோவையில் இருந்து கத்தியை வாங்கிக் கொண்டு, நேற்று முன்தினம் பிற்பகல் சினேகா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, சினேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருடன் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த தீபக், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சினேகாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் கிழித்துள்ளார்.

பின்னார், சினேகாவின் துப்பட்டாவால் தீபாக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தீபக்கின் உடலை மீட்ட திருப்பூர் வடக்கு போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!

மேலும், தீபக்கின் பையை சோதனை செய்தபோது, அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘‘நான் உன்னை திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. இனிமேல் இந்த உலகத்தில் நம்மால் ஒன்றாக வாழ முடியாது. அதனால் உன்னையும் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். நாம் இருவரும் சொர்க்கத்தில் போய் ஒன்றாக சேர்ந்து வாழலாம்’’ என எழுதியிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

11 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

12 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

12 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

13 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

14 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

15 hours ago

This website uses cookies.