Categories: தமிழகம்

+2 மாணவியை விரட்டி விரட்டி காதல்.. எதிர்பாரா மரணம் : பழி வாங்க கதையை முடித்த அண்ணன்.!!

+2 மாணவியை விரட்டி விரட்டி காதல்.. எதிர்பாரா மரணம் : பழி வாங்க கதையை முடித்த அண்ணன்.!!

சென்னை புழல் ஜெய் பாலாஜி நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு, கை, உடல் என பல்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் புழல் அடுத்த லட்சுமிபுரம் சேர்ந்த அவினாஷ் (எ) இம்மானுவேல் (18) வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட அவினாஷ் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீஸில் புழல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இளம்பரிதி (19), சூர்யா (23), சந்தோஷ் (21), லோகேஷ் (20) ஆகிய 4பேர் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவினாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பரிதியின் தங்கை ஜெயபாரதியை காதலித்ததாகவும், நண்பனுடன் காதலிக்கும் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டின் அருகே வந்த போது பெண்ணின் அண்ணன் இளம்பரிதி அவர்களை கண்டித்து தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்ட முற்பட்ட போது அவினாஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவருடன் வந்த நண்பர் நவீன் சக்கரவர்த்தி வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக இளம்பரிதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே அவினாஷ் காதலித்து தொல்லை தருவதால் ஜெயபாரதியை பாட்டி வீடு அமைந்துள்ள பொன்னேரி அருகே ஆமிதாநல்லூரில் தங்க வைத்த நிலையில் +2 தேர்வு எழுதுவதற்காக கடந்த மார்ச் 19ஆம் தேதி தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஆத்தூர் மேம்பாலம் அருகே லாரி மோதி ஜெயபாரதி உயிரிழந்த நிலையில் தந்தை தயாநிதி கால் நசுங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்!

தங்கை மரணத்திற்கு பழி வாங்குவதற்காக இளம்பரிதி அவினாஷை தமது வீட்டின் அருகே வரவழைத்து மது வாங்கி கொடுத்து சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து பழி தீர்த்தது கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புழல் போலீசார் 4பேரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.