தமிழகம்

கசந்து போன காதல்… தாலி கட்ட மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுதை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் புதுத்தெருவைசேர்ந்தவர் அன்பழகன் மகள் கற்பகலட்சுமி என்ற அபிநயா வயது 21. இவர் தந்தை இறந்து விடவே தாயாருடன் வசித்து வருகிறார்.

காட்டுமன்னார்கோவில் செயல்படும் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்து குடும்ப சூழல் காரணமாக இடையில் நின்று விட்டார். தற்போது சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரும் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மதியழகன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மதியழகனின் நடத்தையில் சில மாறுபாடுகள் ஏற்பட்டதால் அவரை திருமணம் செய்து கொள்ள கற்பக லட்சுமி மறுத்த உள்ளார்.

மேலும் மதியழகன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் வெள்ளிக்கிழமை காலை கீழகடம்பூர் கிராமத்திற்குச் சென்று கற்பகலட்சுமி என்ற அபிநயாவை சந்தித்து பேசினார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கற்பக லட்சுமி கழுத்தில் வெட்டி விட்டு தெருவில் நடந்து சென்று உள்ளார்.

இதையும் படியுங்க: எனக்கே கொலை மிரட்டலா? நான் நெல்லைக்காரன்… இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் : மதுரை ஆதீனம்!

பலத்த காயமடைந்த கற்பகலட்சுமியின் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பகலட்சுமியை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கீழ்க்கடம்பூர் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்து கற்பகலட்சுமியை வெட்ட பயன்படுத்தப்பட்ட அரிவாளை பறிமுதல் செய்தனர்.மேலும் கற்பகலட்சுமியை வெட்டிவிட்டு தப்பியோடிய மதியழகனை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.