Categories: தமிழகம்

குமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிள் பேரணி: கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி!!

கோவை: மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தா கல்பா பவுண்டேசன் நிறுவன தலைவரும் ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரமத்தின் பிரம்மரிஷியும் ஆன ஈஸ்வரன் குருஜி அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி கடந்த மாதம் 21ம் தேதி சிட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் ( SAVE BIRDS YOUR SELF) எனும் தலைப்பில் குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சுமார் 4000 கிலோ மீட்டர் இரு சக்கர பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து கோவை திரும்பிய குருஜி ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,பறவைகளின் புகழிடமாக உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று, அந்த கிராம மக்களை கவுரவித்து, தமது பயணத்தை துவங்கியதாக கூறிய அவர்,மண்வளம், மரங்களை பாதுகாப்பது போன்றவகளை காட்டிலும் மனித குலம் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தமது பயணத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும், கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் தமது பேரணியை நிறைவு செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக தமது பயணத்தின் நோக்கத்தை செல்லும் இடங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் இளம் தலைமுறையினரிடம் எடுத்து கூறியதாகவும் பறவைகளின் தன்மையை மனித குலம் அறிந்து கொள்வதற்காக இந்த பேரணியை நடத்தியாக குறிப்பிட்டார்.

மேலும் தமது பயணம் முழுவதும் சாலை மார்க்கமாகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர்,இந்தியா முழுவதும் தரமான சாலைகளில் பயணம் மேற்கொண்டதாகவும்,இந்த நேரத்தில் மத்திய அரசிற்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

தமது பயணத்தின் நடுவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து தமது பயணத்தின் நோக்கம் குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய தீர்வு என உறுதிபட தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

13 minutes ago

17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!

17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…

22 minutes ago

எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

50 minutes ago

நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…

2 hours ago

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…

3 hours ago

இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…

3 hours ago

This website uses cookies.