விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் (பொறுப்பு) தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 5 மாலை 4 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 66,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் பணம் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரகண்டநல்லுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட திடீர் சோதனையில் அங்கு இருந்த இடைத்தரகர்கள் மற்றும் சார்பதிவாளர் அய்யன்னார் (பொறுப்பு) ஆகியோரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வானூர் திண்டிவனம் அரகண்டநல்லூர் திண்டிவனம் வானூர் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்திலும் கண்டாச்சிபுரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.