பண்ருட்டி: மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், அதேமேடையில் அத்தை மகனை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொறியியல் பட்டதாரிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து. இவர்கள் இருவருக்கும் பண்ருட்டியில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதில் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் ஒருபகுதியாக பாடல் ஒன்றுக்கு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.
அப்போது மணமகளின் உறவினர் ஒருவரும் மேடையில் வந்து நடனமாடியுள்ளார். இதன் காரணமாக மணமகன் மிகவும் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்தில் மணமகளின் கன்னத்தில் அறைந்துள்ளார். அனைவரும் முன்பாக திடீரென மணமகன் அப்பெண்ணை அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதைத் தொடர்ந்து மணமகள் மிகவும் வருத்தத்துடன் அழுதுள்ளார். மேலும் அப்பெண், “இவர் திருமணத்திற்கு முன்பாகவே இப்படி நடந்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆகவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்” என்று அழுது கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து மணமகளை இரு வீட்டினரும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது மணமகளை அறைந்தற்காக மணமகன் அப்பெண்ணின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணத்தை நிறுத்தும் முடிவை இரு குடும்பத்தினரும் எடுத்துள்ளனர்.
அதன்பின்னர் மணமகளின் குடும்பத்தினர் உறவினர்களுடன் கலந்து பேசி அவரது அத்தை மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். திருமண வரவேற்பில் மணமகளை மணமகன் அறைந்ததால் அந்த திருமணம் நின்றுபோனதும், மணமகளின் சமயோசிதமான முடிவும் அங்கு மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.