Categories: தமிழகம்

இன்னொரு சோனாகாச்சியா கள்ளக்குறிச்சி? பெண்களுடன் சிக்கிய புரோக்கர்கள் : அதிர வைத்த சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் பாலியல் தொழிலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை சிலர் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி கவர பகுதியில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராபிட்சன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின்போது கவரை தெரு பகுதியில் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர்கள் ஆன வீரமணி, தர்மராஜ், தங்கராசு மற்றும் செந்தில்குமார், பாண்டியன் என 5 ஆண்கள் மற்றும் அமுதா, அலமேலு, வித்யா,இந்துமதி என்ற நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் பாலியல் குற்ற சம்பவங்களில் பெண்களை ஈடுபடுத்தி இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த ஒன்பது பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கள்ளச்சாரையும் அருந்தி கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இப்போது இன்னொரு பரபரப்பானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி நகர பகுதி மற்றும் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதிகளில் இதுபோல பாலியல் குற்றச்சம்பங்கள் நெடு நாட்களாகவே இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

அதேபோல திருக்கோவிலூர் அருகே மாடாபூண்டி கூட்ரோடு பகுதியில் காலை 6:00 மணி முதல் செடி, கொடிகளில் மறைக்க வைக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வரலாறு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் பாலியல் குற்றச்சம்பவங்கள், கள்ளத்தனமான மது விற்பனைகள் இப்படி எண்ணற்ற செயல்கள் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.