தமிழகம்

சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

கோவையில், தம்பியைக் கொலை செய்த அக்காவுடன் தகாத நபரில் இருந்தவரை அண்ணன் மற்றும் மைத்துனர் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் முருகன் (37). தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜ். இந்த நிலையில், தேவிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து உள்ளது.

பின்னர், இது குடும்பத்தினருக்கு தெரிய வந்து உள்ளது. இதனை தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜ் தட்டிக் கேட்டு உள்ளார். அதற்காக, மதன்ராஜ், தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜை கடந்த 2023ஆம் ஆண்டு கொலை செய்து உள்ளார். இதன் பேரில் கைதான மதன்ராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்,

இதனையடுத்து, மீண்டும் தேவிகா உடன் மதன்ராஜ் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், கொலையுண்ட ஜெகன் ராஜின் அண்ணன் சித்திரை குமார் (38) மற்றும் தேவிகாவின் கணவர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 4 மணியளவில், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பப்பாளையம் மருதப்பர் நகர் பகுதியில், மதன்ராஜ் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சித்திரை குமார் மற்றும் முருகன் இருவரும், தாங்கள் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு மதன்ராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், மதன் ராஜின் இடது தாடை, இடது புருவம் மற்றும் வலது முன்கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மதன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் ஓடி வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் கேங்ஸ்டராக மாற இதுதான் காரணம்.. கோர்ட்டே சொன்ன அதிரடி கருத்து!

அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், வெட்டிவிட்டு தப்பி ஓடிய சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் இருகூர் பகுதியில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

17 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

17 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

18 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

19 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

19 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

20 hours ago

This website uses cookies.