தமிழகம்

சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

கோவையில், தம்பியைக் கொலை செய்த அக்காவுடன் தகாத நபரில் இருந்தவரை அண்ணன் மற்றும் மைத்துனர் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் முருகன் (37). தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜ். இந்த நிலையில், தேவிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து உள்ளது.

பின்னர், இது குடும்பத்தினருக்கு தெரிய வந்து உள்ளது. இதனை தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜ் தட்டிக் கேட்டு உள்ளார். அதற்காக, மதன்ராஜ், தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜை கடந்த 2023ஆம் ஆண்டு கொலை செய்து உள்ளார். இதன் பேரில் கைதான மதன்ராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்,

இதனையடுத்து, மீண்டும் தேவிகா உடன் மதன்ராஜ் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், கொலையுண்ட ஜெகன் ராஜின் அண்ணன் சித்திரை குமார் (38) மற்றும் தேவிகாவின் கணவர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 4 மணியளவில், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பப்பாளையம் மருதப்பர் நகர் பகுதியில், மதன்ராஜ் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சித்திரை குமார் மற்றும் முருகன் இருவரும், தாங்கள் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு மதன்ராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், மதன் ராஜின் இடது தாடை, இடது புருவம் மற்றும் வலது முன்கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மதன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் ஓடி வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் கேங்ஸ்டராக மாற இதுதான் காரணம்.. கோர்ட்டே சொன்ன அதிரடி கருத்து!

அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், வெட்டிவிட்டு தப்பி ஓடிய சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் இருகூர் பகுதியில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.