Categories: தமிழகம்

அண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சொத்துக்காக தம்பி செய்த கொடூரம்…மதுரையில் பரபரப்பு..!!

மதுரை: மேலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக, போஸ்ட் மேனான அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ராஜீவ்காந்தி. இவர் கீழவளவில் உள்ள தபால்நிலையத்தில் போஸ்டமேனாக பணிபுரிந்து வரும் நிலையில், இவருக்கும் இவரது தம்பியான கார்த்திக் என்பவருக்கும், சொத்து குறித்தும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று இருவருக்கும் வீட்டில் இருந்த போது இது தொடர்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த அரிவாளால் ராஜீவ்காந்தியை தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜீவ்காந்தி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் சரக துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் கீழவளவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த ராஜீவ்காந்தி உடலை கைப்பற்றி உடற்கூறய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக, கார்த்திக்கை கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.