திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!
இந்நிலையில் மனைவியின் சகோதரி என்கிற முறையில் சதீஷ் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வாராம்.
அதேபோல் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சதீஷ், மனைவியின் சகோதரி குளித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமலேயே சதீஷ் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்தப் பெண் கூச்சலிடவே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சதீசின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் குளியலை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.