கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கைகளை கட்டி,கழுத்தை கிரைண்டர் வயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மயிலாத்தாள் (வயது 77). கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்ககப்பட்ட மகனும் கடந்த 20 ஆண்டுக்களுக்கு முன் மாயமானார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி இரு தினங்களாக வெளியில் வரவில்லை. மேலும் அப்பகுதியை கடந்து சென்ற பழவியாபாரி சிவக்குமார் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிவதாக மூதாட்டியின் சகோதரி கண்ணம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் வந்த கண்ணம்மாள் வீட்டைத்திறந்து பார்த்தார். அப்போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டபட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு கிடைந்தார்.
இது தொடர்பாக கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யபட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது மூதாட்டி தனியாக இருப்பதால் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.